புலியை கண்டேன் (போலியை அல்ல)

தலைப்பைக் கண்டு பயப்படவேண்டாம். இது வேற விசஷயம்.

முதல்ல இந்த படத்தைப் பாருங்க.




நீங்க ஹோமம் நடத்துவது பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். பல விதமான ஹோமங்கள் பல விதமான காரணங்களுக்காக. (அதைப் பற்றியதல்ல இந்தப் பதிவு)

இப்ப அதுல ஒரு வகை 'சண்டி ஹோமம்' என்பது. இதை பற்றிய மேலதிக தகவல்கள் ஆங்கிலத்தில் இங்கே இருக்கு.

முக்கியமானத மட்டும் தமிழில் (மொழிபெயர்ப்பில் தவறிருந்தால் மன்னிக்கவும்)

இந்த ஹோமம் எதுக்குன்னா 'ஒருவனுடைய/பலருடைய முன்னேற்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தடைகளை நீக்குவதற்காக' என்று சொல்றாங்க.

இதை எப்படி பாக்கணும்னா 'துர்கா தேவி புலியின் மேல் பயணம் செய்வதாகவும், நாம் துர்கையின் மடியில் குழந்தையாகவும் இருக்கிறோமாம்'.

உங்களுக்கு எதுனா தெ(பு)ரியுதா?