யாருக்கும் வெட்கமில்லை!!!

ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவனுக்கு வெட்கமென்ன
ஏ சமுதாயமே!!!

புலியை கண்டேன் (போலியை அல்ல)

தலைப்பைக் கண்டு பயப்படவேண்டாம். இது வேற விசஷயம்.

முதல்ல இந்த படத்தைப் பாருங்க.




நீங்க ஹோமம் நடத்துவது பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். பல விதமான ஹோமங்கள் பல விதமான காரணங்களுக்காக. (அதைப் பற்றியதல்ல இந்தப் பதிவு)

இப்ப அதுல ஒரு வகை 'சண்டி ஹோமம்' என்பது. இதை பற்றிய மேலதிக தகவல்கள் ஆங்கிலத்தில் இங்கே இருக்கு.

முக்கியமானத மட்டும் தமிழில் (மொழிபெயர்ப்பில் தவறிருந்தால் மன்னிக்கவும்)

இந்த ஹோமம் எதுக்குன்னா 'ஒருவனுடைய/பலருடைய முன்னேற்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தடைகளை நீக்குவதற்காக' என்று சொல்றாங்க.

இதை எப்படி பாக்கணும்னா 'துர்கா தேவி புலியின் மேல் பயணம் செய்வதாகவும், நாம் துர்கையின் மடியில் குழந்தையாகவும் இருக்கிறோமாம்'.

உங்களுக்கு எதுனா தெ(பு)ரியுதா?

நீங்க கணக்குல பு(எ)லியா?

ஒரு சின்ன கணக்கு.

கடைசி பென்ச் கூட சுலமபமா சொல்லிடலாம் விடையை. முயற்சி செஞ்சு பாருங்க.

ஒரு ஊர்ல ஒரு பொண்ணு இருந்தாளாம். (ஆரம்பிச்சுட்டாங்கய்யா). அந்தப் பொண்ணுக்கு எத்தனை வயசுன்னு கேக்கற 'ஜொள்ஸ்' ல்லாம் ஓரங்கட்டேய்.

சந்தைக்கு போகறதுக்காக பஸ்ல நின்னுக்கிட்டிருந்தாளாம். (சைட் அடிச்சா 'உள்ள' தள்ளிடுவாங்க. ஜாக்கிரதை)

அந்தப் பொண்ணு ஏழு பை வச்சிருந்தாளாம்.

ஒவ்வொரு பையிலும் ஏழு 'அம்மா' முயல் ('அந்த' அம்மா இல்ல) இருக்குதாம்.

ஒவ்வொரு 'அம்மா' முயலுக்கும் ஏழு குட்டி முயலாம்.

இப்ப கேள்வி என்னான்னா....

மொத்தம் எத்தனை முயல்னுதானே கேக்கப் போறே?

ஏம்பா யாருப்பா அது? கணக்க முழுசா சொல்லி முடிக்கறதுக்குள்ள குறுக்கால முந்திரி கொட்டை மாதிரி.

சரி இப்ப கேள்வி என்னான்னா...


அந்த பஸ்ல மொத்தம் எத்தனை கால்கள்?????

பி.கு: அ) அந்த பஸ்ல வேற யாரும் இல்ல.
ஆ) நீங்க புடிக்கிற முயலுக்கு மூணு காலெல்லாம் சொல்லப் படாது.

கூட்டி கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும்


கணக்கு போட்டு ரொம்ப மண்ட காய்ஞ்சவங்களுக்காக... ஒரு ஜாலி

எப்படித் தான் இப்படியெல்லாம் யோசி(கடி)க்க முடியுதோ !!!

எனக்கு மின்னஞ்சலில் வந்த சமீபத்திய சங்கங்களின் பட்டியல். மணிவண்ணன் என்பவர் தொகுத்திருக்கிறார்.





ஞாநியும் செக்ஸ் கல்வியும்

சில பேர் எழுதலாங்கறாங்க. சில பேர் கூடாதுங்கறாங்க. நம் நாட்டில் பாலியல் பற்றியும், பாலியல் கல்வி பற்றியும் போதிய விழிப்புணர்வும், புரிதல்களும் இல்லை.

நாம சொல்ல வந்த விடயத்துக்கு வருவோம்.

சில தொழில்கள் செய்பவர்களை Professionals என்று சொல்வோம். மருத்துவர்கள், பொறியாளர்கள் ஆகியோர். இது சம்பந்தப் பட்ட செயல்களை இவர்கள் தான் செய்ய வேண்டும். குறிப்பாக மருத்துவர்கள். ஏனென்றால் இதனால் ஏற்படும் விளைவுகள் மீளப் பெற முடியாதவை.

செக்ஸ் கல்வியும் இது போலத் தான். இதற்கு முறையான மருத்துவர்கள் மட்டுமே ஆலோசனை சொல்ல முடியும். சொல்ல வேண்டும். ஒரு பதிவர் எழுதி இருக்கிறார் அனுபவ அறிவு இருந்தால் போதும் என்று. யாருக்கு இல்லை இங்கு அனுபவம். உங்களுக்கிருக்கிறது. எனக்கிருக்கிறது. ஆனால் அனுபவம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப் படுகிறது இல்லையா. அப்பதிவரின் அனுபவத்தை எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்.

//ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.//

//ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.//

எனக்கு கூட ஜுரம் வந்தால் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று அனுபவ அறிவு இருக்கிறது. இருந்தாலும் நாம் ஏன் மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஜூரம் என்பது மற்ற நோய்களுக்கான முன்னறிவிப்பே. இது மருத்துவரால் மட்டுமே சரியாக கண்டறியப் பட்டு அதற்கேற்றார்போல் மருந்து கொடுக்கப் படுகிறது. இது திருப்பதியில் போய் மொட்டையைத் தேடும் கதையில்லை.

முறையான மருத்துவக் கல்வியும் ,அறிவும், தேர்ந்த அணுகுமுறையும் இன்றி பாலியல் கல்வி கற்பிக்கப் பட்டால், தவறான பின் விளைவுகளையே ஏற்படுத்தும்

ஞாநி ஒரு பத்திகையாளராக இருக்கலாம். ஆனால் அவர் செக்ஸ் கல்வி (கவனிக்கவும்) பற்றி எழுதுவது என்பது சுயவைத்தியம் பார்ப்பது போலாகும்.

அனுராதா ரமணன் அந்தரங்க ஆலோசனை சொல்வதற்கும், மாத்ருபூதம் ஆலோசனை சொல்வதற்கும் வித்தியாசமில்லையா?

அனுராதா ரமணனுக்கு சமூகப் பார்வை. மாத்ருபூதத்திற்கு மருத்துவப் பார்வை.

மற்றபடி, யார் வேண்டுமானாலும் பத்திரிகையாளனாகலாம். எழுத்தாளனாகலாம். பொறியாளராகலாம். (எங்க ஊர் மேஸ்திரி எட்டு கூட தாண்டல. ஆனா சூப்பரா வீடு கட்டுவாரு.)

ஆனால் மருத்துவராக முடியாது. அதைப் பற்றி எழுத முடியாது என்பது என் புரிதல்.

என் பதிவு திருடப் பட்டது

திருடர்களில் பலவகை உண்டு. இது கணினி யுகம் இல்லையா?.

நான் போட்ட பதிவை அப்படியே அச்சு மாறாமல் இவர் தன்னுடைய பதிவில் ஏற்றியிருக்கிறார்.

அய்யா சாமி நீ நல்லாயிரு.

எனக்கு இதில் ஏதும் வருத்தமில்லை. ஒரு தகவல் பல பேரை சென்றடைய வேண்டும் என்ற ஆர்வத்தில் செய்திருக்கலாம். குறைந்தது சில மாற்றங்கள் செய்திருந்தாலோ அல்லது எங்காவது ஒரு மூலை என் பதிவின் சுட்டியை மேற்கோள் காட்டியிருந்தாலோ போதுமே.

நீங்கள் என் பதிவுக்கு இணைப்பு கொடுக்கவில்லை. அதனாலென்ன நான் கொடுக்கிறேன் இணைப்பு உங்கள் பதிவுக்கு


இருந்தாலும் கேக்கறேன்...

ஏன் இந்த கொலைவெறிதனம்.???


ஏற்கனவே தீபா இதைப் பற்றி எழுதியிருக்கிறார்.

தயாநிதியின் ஆங்கில மோகம்?

தொலைக் காட்சியில் செய்திகளைப் பார்க்கும் போதெல்லாம் நீங்கள் ஒன்றை கவனித்திருக்கக் கூடும்.

செய்திக்காக பேட்டி எடுக்கும் போது தமிழக அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் சிலர் தமிழைத் தவிர்த்து ஆங்கிலத்தில் வலுக்கட்டாயமாக பேசுவதை.

நேற்று 'மக்கள்' தொலைக்காட்சியில் மா.நன்னன் அவர்கள் தமிழில் பேசுவதின் முக்கியத்துவத்தை மிக அழகாக சொன்னார். அதில் தமிழ் வார்த்தை 'கமுக்கமாக ' என்பதைப் பற்றி விளக்கினார். உண்மையில் சொல்லப் போனால் இந்த வார்த்தை தமிழ் தான் என்று இதற்கு முன்பு வரை எனக்கு தெரியாது. நான் இதை 'சென்னை மொழி' என்றே நினைத்து வந்தேன். கமுக்கம் என்பதின் அர்த்தம் 'இரகசியம்' என்ற வடமொழியின் பொருள் தருகிறது.

தமிழர்கள் தமிழை புறக்கணித்தால் ஏற்படும் விளைவுகளையும், அருகி வரும் மொழிகளில் தமிழும் ஒன்று சொன்ன போது உண்மையாகவே வலித்தது.

அடுத்து சன் தொலைக்காட்சியின் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது சன் பவுண்டேஷன் ஒரு கல்லூரிக்கு 23 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து விட்டு மாணவி(வர்க)ளிடம் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

தமிழ் நாட்டில், அதுவும் தமிழ் மாணவர்களிடம், தமிழில் பேசினால் என்ன குறைந்தா போய்விடுவார்?. நாம் என்ன இலக்கியத் தமிழிலா பேசச் சொல்கிறோம். (அதுக்காக ஒண்டிக்கு ஒண்டி வர்றியா என்றெல்லாம் பேசக் கூடாது) .தமிங்கிலீசில் பேசியிருந்தாலும் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம்.

இவரை ஒப்பிடும் போது லத்திகா சரண் எவ்வளவோ தேவலை. அவர் தமிழ் பேசும் அழகே அழகு. அவர் கூடுமானவரை தமிழிலேயே பதில் சொல்லும் போது எவ்வளவு பெருமையாக இருக்கிறது. இவரைப் போல இன்னும் பலர்.

தமிழர்களிடம் தமிழில் பேசுவதில் என்ன தயக்கம்?. என்ன கேவலம்?.

தமிழ் படிக்க மறுத்(றந்)து விட்டால் வரும் இழப்பு நமக்கே.

நீங்கள் 'நோக்கியா" கைப் பேசி உபயோகிப்பவரா?

ஆம் எனில் உங்களுக்காக...

'நோக்கியா' நிறுவனம் தன்னுடைய கைப்பேசியில் பயன்படுத்தப்படும் பேட்டரியில் சிறிய குறைபாட்டினை கண்டறிந்துள்ளது. உங்களுடைய கைப்பேசியில் உள்ள பேட்டரி சரியானதா எனக் கண்டறிய கீழே உள்ள சுட்டியை சுட்டுங்கள்.

http://batteryreplacement.nokia.com/batteryreplacement/en/

இங்கு சென்று உங்கள் பேட்டரியின் வரிசை எண்ணை கொடுத்தால், அது சரிபார்க்கப் பட்டு, உங்கள் பேட்டரி குறைபாடுள்ளதெண்றால் 'நோக்கியா' நிறுவனம் அதை மாற்றித் தருகிறது.

என்னுடைய கைப்பேசியின் பேட்டரியும் இதன் கீழ் வருகிறது.

(பேட்டரிக்கு என்ன தமிழில்???)

நான் ப்ராமணன் இல்லை

என் சொந்த வாழ்க்கையை பதிவு செய்யும் "ஆட்டோகிராப்' பதிவு இது.

என்னுடை இன்றைய வளர்ச்சிக்கு காரணமான என் பாட்டிக்கு இந்த பதிவு சமர்ப்பனம்.

நாங்கள் வசிப்பது பிராமணர் தெருவில் தான். ஆனால் நாங்கள் பிராமணரல்ல. எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்தே என் தாயார் ஒரு ஐயங்கார் வீட்டில் தான் வேலை செய்து வந்தார். அந்த வீட்டில் ஒரே ஒரு பாட்டி மட்டும் தான். அவர்களுக்கு குழந்தை இல்லை. அது ஐயர் தெரு என்பதால் மற்ற ஜாதிக் காரர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம். யாரும் அவர்களின் வீட்டிற்குள் அனுமதி கிடையாது. கொல்லைப்புறமாகத் தான் சென்று வீட்டு வேலை செய்ய வேண்டும். காபி குடுத்த தம்ளரை கழுவி வைத்தாலும் அவர்கள் அதன் மேல் தண்ணீர் தெளித்து தான் கொண்டு செல்வார்கள். அவர்களைத் தொடக்கூடது. தொட்டுவிட்டால் அவ்ளோ தான். பயங்கரமாக திட்டுவார்கள். ஆனால் மேற்சொன்ன அத்தனை கட்டுப்பாடுகளையும் உடைத்து அந்த பாட்டியிடம் நான் விளையாடுவேன். அவர்களின் பூஜை அறையையும், சமையல் அறையையும் விட்டு வைக்க மாட்டேன். அவர்களைத் தொட்டு விட்டால் கூட கடிந்து கொள்ள மாட்டார்கள்.

இதனால் மற்ற ஐயர் வீட்டினரெல்லாம் அந்த பாட்டியிடம் சென்று இது மாதிரியெல்லாம் சூத்திரர்களை அனுமதிக்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் பாட்டி கண்டுக்கவே மாட்டாங்க. ஆனால் பாட்டியின் சொந்தக் காரங்க யாராவது வந்தா மட்டும் நான் கொஞ்சம் 'அடக்கி வாசிப்பேன்'. அவர்களின் வீட்டிலேயே படிப்பது, விளையாடுவது, தூங்குவது (என் வீட்டிலுள்ள அனைவரும்), பாட்டிக்கு கடைக்கு செல்வது, கோயிலிக்கு கூட்டி செல்வது எல்லாமே.

என் வீட்டில் அசைவம் செய்தால் மட்டும் அவர்களின் பூஜை அறைக்குள் நுழைய விட மாட்டார்கள். எங்கள் வீட்டில் வடை , பாயாசம் செய்தால் மற்ற யாருக்கும் தெரியாமல் கொண்டு போய்க் கொடுப்போம். எங்களுக்கு அவர்கள் செய்த உதவிகள் ஏராளம்.

அந்த கால கட்டத்தில் (1975-1990) இந்த மாதிரி முற்போக்காக யாரும் அந்தத் தெருவில் கிடையாது. சிறுவயதில் ஒருமுறை பாட்டியிடம் விளையாட்டாக 'ஐ லவ் யூ!' என்று சொல்லி அதற்கு பாட்டி என் வயசு என்ன? உன் வயசென்ன? நீ எப்படி என்னைப் பார்த்து சொல்லலாம் என்று கொஞ்சம் டென்ஷாகி விட்டார்கள். என் அம்மாவிடம் புகாரிட்டார்கள். நான் பாட்டியை சமாதானப் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அவர்களுக்கு லவ் என்பதின் அர்த்தம் காதல் மட்டுமல்ல, பாசம், நேசம், பரிவு, அன்பு என்று கூறிய பிறகு கொஞ்சம் சமாதானமடைந்தார்கள்.

எங்களுக்கு படிப்பின் அருமையை சொல்லிக் கொடுத்ததே அவர்கள் தான். சில சமயம் விளையாட்டாக ' ஆமா இவரு படிச்சு பெரிய ஐஏஸ் ஆபிசராவப் போறாரு. அமெரிக்கா போகப் போறாரு என்று கூறுவார்கள். இந்த பேச்சே எங்களை படிக்க தூண்டியது. அவர்கள் கூறியபடி ஐஏஸ் ஆபிசரோ அல்லது அமெரிக்காவோ போகவில்லை என்றாலும் கிட்டத் தட்ட ஆசியாவை சுற்றியிருக்கிறேன். ஆனால் எங்களின் வளர்ச்சியைப் பார்க்க அவர்கள் இல்லை. என் வளர்ச்சி ஏணியின் ஒவ்வொரு படிக்கட்டினை ஏறும் போதும் அவர்களை நினைக்கத் தவறுவதில்லை.

சொல்லுங்கள் இப்போது. இந்தப் பாட்டி பிராமணனா? மனிதனா??கடவுளா???

சிங்கத்தைச் சுட்ட 'குடை'?

சற்றுமுன்னில் வந்த இந்த செய்தியைப் படித்தவுடன் ஏனோ எனக்கு எங்கோ படித்த இந்த ஜோக் தவிர்க்க முடியாமல் ஞாபகம் வந்தது.

ஏறக்குறைய 90 வயதான கிழவர் தன்னுடைய வருடாந்திர மருத்துவ சோதனைக்காக டாக்டரிடம் சென்றார்.

அவரை பார்த்த டாக்டர் " எப்படி இருக்கிறீர்கள்"

"நன்றாக இருக்கிறேன் டாக்டர். முக்கியமான விஷயம். என்னுடைய 20 வயது மனைவி கர்ப்பமாக உள்ளாள். அடுத்த மாதம் டெலிவரி" என்றார் மகிழ்ச்சியாக.

டாக்டர் சிறிது யோசனைக்குப் பின்னர் " ஒரு கதை சொல்லட்டுமா"

"எனக்கு தெரிந்த ஒருத்தர் நல்ல வேட்டையாடுபவர். தவறாமல் வேட்டைக்குச் சென்று விடுவார். இப்படித்தான் ஒரு நாள் வேட்டைக்கு கிளம்பும் போது, அவசரத்தில் துப்பாக்கிக்குப் பதிலாக குடையை எடுத்துச் சென்று விட்டார். காட்டில் அங்கே ஒரு சிங்கம் குகைக்கு வெளியே இருப்பது கண்டு, தன்னுடைய குடையை சிங்கத்துக்கு எதிராக பிடித்து 'டுமீல்'. சிங்கம் உடனே அடிபட்டு செத்து விழுந்தது."

குறுக்கிட்ட கிழவர் " முடியவே முடியாது. அதெப்படி குடையால் சுட முடியும். வேறு யாராவது சுட்டிருக்க வேண்டும்" என்றார்.


டாக்டர் " மிகச் சரியாக சொன்னீர்கள். அதைத் தான் உங்களுக்கும் சொல்ல வந்தேன்"