அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஒவ்வொருத்தரும் ஒரு சிலதுக்கு பயப்படுவாங்க.
குறிப்பா சின்ன வயசுல பேய் பிசாசு ன்னு பயமுறுத்திடுவாங்க.
ஒழுங்கா சாப்பிடலன்னா பூச்சாண்டி புடிச்சுக்குவான்னு சாப்பிட சொல்வாங்க.
பூஜைக்கு வச்சிருந்ததை சாப்பிட்டா சாமி கண்ண குத்தும்னுவாங்க.
வீட்டுக்கு வெளியில மாட்ற திருஷ்டி பொம்மைய கண்டா கூட பயமா இருக்கும்.
ஸ்கூலுக்கு போனா வாத்தியார் பயமுறுத்தறது வேற.
இதையெல்லாம் தாண்டி ஒரு சில சமயத்துல கண்ணாடியில நம்ம மூஞ்சியே நம்மளுக்கு பயமாயிருக்கும்?!.
இப்படி பயமே வாழ்க்கையா போச்சு...
இந்தப் படத்த பாருங்க. இந்தக் குழந்தை எதப் பாத்து பயப்படுதுன்னு...
Comment Form under post in blogger/blogspot