குப்பைகள் அகற்றப் பட வேண்டும்

குப்பைகள் எங்கும் நிறைந்துள்ளன. சரியான நேரத்தில் முறையாக குப்பைகளை அகற்றாததனால் வீதியெங்கும், நகரெங்கும் துர்நாற்றம். இதனால் பல வியாதிகளும், தொற்று நோய்களும் பரவக் காரணமாகிறது. குப்பைகளை அகற்றுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட அதை முறையாக பிரித்துதெடுத்துமீண்டும் வெளிவராதவாறு புதைக்கப் பட வேண்டும்.

மேலும் தன் வீட்டை சுத்தமாக வைத்திருக்க குப்பையை குப்பைத் தொட்டியில் போடாமல் தெருவில் குப்பை கொட்டுபவர்களும் சற்று பொறுப்புடன் நடந்து கொண்டால் வீடு மட்டுமல்ல தெரு, நகரம் அனைத்துமே சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும், மற்றவர்கள், புதிதாக நகருக்கு வருபவர்களுக்கும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் சிறந்ததாகவும் இருக்கும்.





செய்தி : சென்னை நகரில் குப்பைகள் அள்ளப் படாததால் தொற்று நோய் பரவும் அபாயம். (மக்கள் தொலைக் காட்சி செய்தி, நாள் ஆகஸ்ட் 31, 2007)

சென்னை மாநகர போலீசார் குப்பையை அகற்றினர். ( தின மலர்)